28 October, 2010

என் பெண்ணே




சர்ப்பத்தீண்டல் நீ என் பெண்ணே ஏறும் விஷம் நான்


தூறல் நிமித்தம் நீ என் பெண்ணே மழையுண்ணும் இல்லாப்பறவை நான்


கானல் அற்ற நீள்சாலை நீ என் பெண்ணே வாழும் அபத்தம் நான்


விரி கை மாரி நீ பெண்ணே தீ மிதிக்கும் பக்தன் நான்



சொல் துறந்த வன பட்சி நீ என் பெண்ணே சிறுகாற்று மென்தூசி நான்


வான் புகுந்த கருநீலம் நீ என் பெண்ணே ஒற்றைச் சுடர் பெற்ற திரிமெழுகு நான்


திசையற்ற மாகாளி நீ என் பெண்ணே கலி கொள்ளும் சிறு தெய்வம் நான்


வலியற்ற மென்தும்பை நீ என் பெண்ணே விழிபிழியும் ஒரு துளி நான்



நீ பெற்றது காதல் என்றாலும் என் பெண்ணே காதல் என்றில்லைஎன்றாலும் காதல்


காதல் வழி நான் பெற்றது என் பெண்ணே காதல் வளி காதல் வலி



பெரும் பாலை நீ என் பெண்ணே சிறுமணல் நான்


பெருங்காதல் நீ என் பெண்ணே சிறு காமம் நான்


பெருங்களிப்பு நீ என் பெண்ணே சிறு கேவல் நான்


பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான்



பாரதி நீ என் பெண்ணே அவன் மீசை நான்


சாரதி நீ என் பெண்ணே அச்சாணி இல்லா சக்கரம் நான்


நீ ரதி நீ என் பெண்ணே அம்பெய்தும் பெருங்காமன் நான்


காதலி நீ என் பெண்ணே காதலன் ...



*********************************





5 comments:

பத்மா said...

நீண்ட நாள் மௌனத்திற்கு பிறகு ...அருமை அழகு
விரி கை மாரி ஆஹா !கற்பனையும் விரிகிறது
welcome back adhiran

ராகவன் said...

அன்பு ஆதிரன்,

எப்படி இருக்கிறீர்கள் ஆதிரன்? நிறைய வாசிப்பு உங்களுடையது, படிப்பின் பின்புலமும், அனுபவங்களும் உங்களுக்கு வாய்க்கப்பெற்ற நண்பர்களும் மிகப்பெரிய பலம் உங்களுக்கு... உங்களின் சில கவிதை எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்... என்ன ஒரு சொல்லாடல், வீச்சு என்று. இப்போதும் படிக்கிறேன் உங்கள் கவிதைகள் கொஞ்சம் நீர்க்கிறதாய் படுகிறது எனக்கு. இந்த கவிதை கூட எனக்கு சாதாரணமாக இருப்பதாகப்படுகிறது. ஒரு சில வரிகளில் தெரியும் ஆதிரன், நெடுக இல்லை என்பது வருத்தமே. யாருக்கோ சொல்ல முற்படும் விஷயங்கள் அல்லது எதுவோ உணர்த்த விரும்பும் விஷயங்களை எங்கோ ஒரு ஓரத்தில் முடக்கி, அதன் பொருட்டாய் மேலும் வளர்த்ததாகப்படுகிறது... என் கனிப்பு தவறாகலாம் ஆனாலும் எனக்கு ஏனோ ஒரு கட்டாயத்தின் பேரில் எழுதியதாய்ப்படுகிறது... இந்த கவிதை... அல்லது சொற்சித்திரம் அல்லது ஒரு அப்ஸ்டராக்ட் ஆர்ட் எதுவோ ஒன்று.

அன்புடன்
ராகவன்

adhiran said...

jalli adichittrukken ragavan. passing very bad mental state. thanks.

க. சீ. சிவக்குமார் said...

கவிதை நீ ! ரசிகன் நான்

adhiran said...

'என் பெண்ணே'

The problem with this poem, according to me, is you have already written something like this two or three times. Despite some good phrases (பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான், சிறுகாற்று மென்தூசி நான்), it has a teja vu feeling. You could've saved those phrases for some other poem. 'You are this; I am that' is a format done and dusted with from Bharathi to Vairamuthu.

.Parthi.